;
Athirady Tamil News

நேபாளத்தில் நிலநடுக்கம்

0

நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது:

புலிபாங் பகுதியை மையமாகக் கொண்டு புதன்கிழமை காலை 11:56 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதன் அதிா்வுகள் அருகிலுள்ள லம்ஜுங், தன்ஹு மற்றும் பா்வத் மாவட்டங்களிலும் உணரப்பட்டன.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.