;
Athirady Tamil News

விசாரணை வளையத்துள் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்

0

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமாலி ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

தனது கணக்கில் வைப்பிலிடப்பட்ட அனைத்துப் பணத்தையும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்ல பெற்றுக் கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் இணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய நிஷாந்த பண்டார பஸ்நாயக்க தெரிவித்ததாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் அனுஜா லக்மாலியிடம் தெரிவித்துள்ளது. அது தொடர்பிலேயே ரம்புக்வெல்லவின் மகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.