;
Athirady Tamil News

இன்றுகாலை பரபரப்பை ஏற்படுத்திய துப்பாகிச்சூடு

0

களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.

பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்த பணியாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம்

பாணந்துறை, வேகட பகுதியில் முச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிலையமொன்றின் உரிமையாளரை இலக்கு வைத்து அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

இன்று (29) காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் குறித்த நபரின் முதுகில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் T-56 துப்பாக்கியால் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்துவதை CCTV காட்சிகள் காட்டுகின்றன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வௌிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நிலங்கவின் நெருங்கிய உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப நாட்களாக, நிலங்க மற்றும் பாணந்துறை குடு சலிந்துவின் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மாலமுல்ல மற்றும் மாதுபிட்டிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.