;
Athirady Tamil News

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி… ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா

0

இந்தியா தனது பாதுகாப்புத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும் முனைப்பில் உள்ளது.

உலகளாவிய இராணுவ சக்தியாக
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒன்றை சோதிக்க தயாராகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

உலகின் வேகமான மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாக இது அடையாளப்படுத்தப்படும் என்றே கூறப்படுகிறது. இந்த ஏவுகணையானது மேக் 5 வேகம் கொண்டது அல்லது மணிக்கு தோராயமாக 6,120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வளர்ச்சி, உலகளாவிய இராணுவ சக்தியாக இந்தியாவின் நிலையை கணிசமாக மேம்படுத்தும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. மூத்த DRDO விஞ்ஞானியும், பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் சுதிர் குமார் மிஸ்ரா சமீபத்தில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஹைப்பர்சோனிக் எஞ்சின் சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது என்றும், முழுமையான அமைப்பு தொடர்பில் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பொதுவாக ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை.

அதாவது, மேக் 5 முதல் மேக் 25 வரையிலான வேகம், தோராயமாக மணிக்கு 6,120 முதல் 24,140 கிமீ வேகம் என்பது இதன் பொருள்.

அவற்றின் அதிவேகம், பறக்கும் போது பாதையை மாற்றும் திறன் மற்றும் குறைந்த உயரத்தில் பறப்பது ஆகியவை தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி அவற்றைக் கண்டறிவது அல்லது இடைமறிப்பதை மிகவும் கடினமாக்குகின்றன.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன… Hypersonic Glide Vehicles மற்றும் Hypersonic Cruise Missiles என்பவை முதன்மையான வகைகள்.

இதில் HGV வகை, ஒரு ராக்கெட்டைப் பயன்படுத்தி மேல் வளிமண்டலத்தில் ஏவப்படும். அதிக உயரத்தை அடைந்த பிறகு, அவை தங்கள் இலக்கை நோக்கி நம்பமுடியாத வேகத்தில் பாய்கின்றன, பறக்கும் போது பெரும்பாலும் திசையை மாற்றுகின்றன, இதனால் அவற்றைக் கண்காணிப்பது மிகவும் கடினம்.

இரண்டாவது HCM வகை ஸ்க்ராம்ஜெட் இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன, அவை உள்வரும் காற்றை அழுத்தி எரிபொருளுடன் கலந்து அதிவேக உந்துதலை உருவாக்குகின்றன. இந்த ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் பறக்கும் மற்றும் அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.