;
Athirady Tamil News

மரம் நடுகை மாத நிகழ்வு!! (படங்கள்)

0

மர நடுகை மாதத்தை முன்னிட்டு நல்லூர் பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கெளசலாசிவா வின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று (17.11.2022) இடம்பெற்றது.

நல்லூர் பிரதேச செயலகத்தினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு சிவலிங்கம் அறக்கொடையின் நிதி அனுசரணையினூடாக 150 (மா , பலா, கொய்யா, நெல்லி, ஜம்புநாவல்) பயன்தரு பழ மரக்கன்றுகள் வைக்கப்பட்டன

இந் நிகழ்வில் பிரதேச செயலர் மற்றும் சிவலிங்கம் அறக்கட்டளையின் ஸ்தாபகர் ரூபன் சிவா மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பழமரக் கன்றுகளை வழங்கி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.