;
Athirady Tamil News

யாழ். போதனாவில் ஐஸ் போதைப்பொருள் பாவித்த அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை!!

0

ஐஸ் போதைப்பொருள் பாவித்தமைக்கான அறிகுறியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதான குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியை சேர்ந்த இரண்டு வயதான குழந்தை திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் குழந்தையின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, குழந்தை ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டு இருந்தமைக்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

அதனை அடுத்து குழந்தையின் தாயாரிடம் வைத்தியர்கள் விசாரணை செய்த போது , குழந்தையின் தந்தையான தனது கணவர் முன்னர் போதைப்பொருள் பாவித்தார் எனவும் , ஆனால் தற்போது அவர் பாவிப்பதனை கைவிட்டு விட்டார் எனவும் , குழந்தை எவ்வாறு போதைப்பொருளை உட்கொண்டது என தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

குழந்தை யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் , தொடர்ந்தும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை , குழந்தை போதைப்பொருள் உட்கொண்டு இருந்தமை தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் ஊடாக முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸார் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள் என அறிய முடிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.