;
Athirady Tamil News

நானா, அவரா ஆணைக்குழு கேட்டார் சாணக்கியன் !!

0

பாராளுமன்றத்தில் நான் இல்லாதபோது, என்னைப்பற்றி அவதூறு பேசி பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சக பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளை நான் முற்றாக மறுக்கின்றேன் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன். மட்டக்களப்பில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு ​கோரினார்.

எனக்கெதிராக முன்​வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான், ஆவணங்களுடன் பதிலளிக்கின்றேன். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணங்களையும் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.

பாராளுமன்றதில் இன்று (22) ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.