;
Athirady Tamil News

கொடூர கத்திக்குத்து; ஆண் பலி – பெண் படுகாயம்!!

0

ஆணும் பெண்ணும் கூரிய ஆயுதத்தால் கொடூரமான முறையில் வெட்டப்பட்டுள்ளனர். அதில், ஆண் பலியானார். படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், ஹிக்கடுவ-வேவல சந்தியில் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது.

காரொன்றில் வந்த இருவரே, அவ்விருவர் மீதும் கத்திவெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.