;
Athirady Tamil News

ஓய்வு பெற்றோரை தக்கவைக்க அனுமதி !!

0

சேவையின் தேவை கருதி, சனிக்கிழமையுடன் (31) ஓய்வு பெறவிருந்த இலங்கை ரயில் திணைக்கள ஊழியர்களை, தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள ஜனாதிபதியின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க, இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளருக்கு எழுதிய எழுத்து மூல கடிதத்திலேயே மேற்குறிப்பிட்ட அனுமதியை வழங்கியுள்ளார்.

வருட இறுதியுடன் ஓய்வு பெறவிருந்த ஊழியர்களை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளுமாறு பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இளநிலை பணியாளர்களின் சேவை இல்லையெனில் சில நிலையங்கள் இயங்காது என அவர்கள் கருதிய நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு அமைய சில ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள பொது முகாமையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.