;
Athirady Tamil News

அமைச்சர் காஞ்சனவை சாடுகிறார் சம்பிக்க !!

0

கடந்த ஓகஸ்ட் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண திருத்தத்தின் பின்னர் இலங்கை மின்சார சபை இலாபம் அடையவில்லை என்று கூறி, வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மக்களை ஏமாற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சாடியுள்ளார்.

பொய்யான மற்றும் தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கு அமைச்சர் தனது கணித அறிவை சரிபார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் காஞ்சனவினால் செவ்வாய்கிழமை (03) வெளியிடப்பட்ட செலவின பிரதிபலிப்பு மின்சார விலை சூத்திரத்துக்கான உத்தேச கட்டண கட்டமைப்பின் விவரங்களை மேற்கோள்காட்டியே சம்பிக்க எம்.பி, தனது டுவிட்டர் பதிவில் மேற்குறிப்பிட்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.