;
Athirady Tamil News

உண்மையை மறைக்கும் சீனா – உலக சுகாதார ஸ்தாபனம் கடும் கண்டனம்!

0

மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸின் பரவல் உச்சம்பெற்றுள்ளது.

அதிகளவான கொரோனா பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்ற போதிலும் இது தொடர்பான பூரணமான உண்மைகளை சீனா வெளியிடவில்லை.

சீனாவின் குறித்த விடயங்கள் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் குறைந்த நிலையில் சீனா சுகாதார கட்டுப்பாடுகளை தளர்த்தியிருந்த நிலையில், மீண்டும் சீனாவில் கோரோனோ தொற்று பரவல் வேகமாக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்று தொடர்பான உண்மைகள் மற்றும் உத்தியோகப்பூர்வ அறிவிப்பை சீனா வெளியிடாமல் மறைப்பது அனைத்து உலக நாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.