;
Athirady Tamil News

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு!!

0

வேட்புமனு பெற்றுக்கொள்வதை நிறுத்துமாறு தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து தொடர்பில் சற்று முன்னர் எமது செய்திப்பிரிவு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவாவிடம் விசாரித்திருந்தது.

வேட்புமனு ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்துமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக பல மாவட்டச் செயலாளர்களும் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இதன்படி நாளை காலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி இது தொடர்பில் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட திடீர் முடிவு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.