;
Athirady Tamil News

சிக்கிய சீன உளவாளி – அமெரிக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை !!

0

சீனாவை சேர்ந்த பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜி சாவோகுன் என்ற சீன நாட்டு பொறியியலாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் இவர் மாணவர்களுக்கான விசாவில் அமெரிக்காவுக்கு சென்று, அங்கு உளவு வேலையில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவர் சீன அரசின் உளவு அமைப்பின் உத்தரவுப்படி அமெரிக்காவில் விமான வர்த்தக இரகசியங்களை திருடவும் முயற்சித்துள்ளார்.

மேலும் ஆள் சேர்ப்புக்காக விஞ்ஞானிகளையும், அந்நாட்டு பொறியியலாளர்களையும் அடையாளம் கண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம், அமெரிக்க அட்டார்னி ஜெனரலுக்கு அறிவிக்காமல், வெளிநாட்டு அரசின் முகவராக செயல்பட்டதற்காக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவருக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.