;
Athirady Tamil News

அடிக்கடி சண்டையிட்டு வந்ததை தட்டி கேட்டதால் மகளை வெட்டி கொன்ற தாய்!!

0

ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டம், பெண்டிலி மரி மண்டலம், எம்.கோட்ட பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பராயடு. இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தம்பதிக்கு சிவசங்கர் என்ற மகனும், சீலம்ஷெட்டி சிவலட்சுமி (வயது 11) என்ற மகளும் இருந்தனர். சிவசங்கர் கடப்பாவில் உள்ள தனியார் பள்ளியிலும், சிவலட்சுமி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். அனுராதாவுக்கு மன நிலை பாதிக்கப்பட்டதால் சில ஆண்டுகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அனுராதா கணவர் மற்றும் குழந்தைகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஒண்டி மிட்டா, புதிய மாதவரம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று அவர்களுடன் தங்கி இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்த அனுராதா மீண்டும் கணவர் மற்றும் மகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

அவரை கணவர் சமாதானம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிவலட்சுமி கதவு உள் பக்கம் தாழிடப்பட்டு இருந்ததால் பலமுறை கதவு தட்டியம் திறக்கவில்லை.தனது தாயின் செல்போனை தொடர்பு கொண்ட போதும் எடுக்கவில்லை. இதனால் வேகமாக கதவை தட்டினார். பின்னர் அனுராதா கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது சிவலட்சுமி ஆத்திரமடைந்து நீ எங்களுடன் இல்லாத போது மகிழ்ச்சியாக இருந்தோம். நீ வந்து அடிக்கடி தகராறு ஈடுபடுவதால் நிம்மதியை இழந்து விட்டதாக தாயிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அனுராதா வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து பெற்ற மகள் என்றும் பாராமல் சிவலட்சுமியின் கழுத்து, கை, கால் என சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சிவலட்சுமி வலியால் அலறியபடி துடித்துடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். சிவலட்சுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவலட்சுமி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுராதாவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.