;
Athirady Tamil News

மின்சார சபையின் கோரிக்கை நிராரிப்பு!!

0

இலங்கை மின்சார சபையின் மின்வெட்டு கோரிக்கை உயர்தர பரீட்சையை பாதிக்கும் என்பதால் அதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகளை மீறுவதற்கு மின்சார சபையின் கோரிக்கை உதவுவதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை காலத்திலும் மின்வெட்டை தொடரவுள்ளதாகவும் அது குறித்து ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் மின்சாரசபை தெரிவித்ததையடுத்தே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தங்களது பிரதேசத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமாயின் 0775687387 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0112392641 தொலைநகல் இலக்கத்துக்கோ எழுத்து மூலம் அறிவிக்குமாறும் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.