;
Athirady Tamil News

சீனாவில் நிலநடுக்கம்!!

0

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.49 மணியளவில் நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் அதிர்ந்தன.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி னர். விமான நிலையத்திலும் பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ஆக பதிவாகி இருந்ததாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.