;
Athirady Tamil News

நகரக் குரங்குகள் தோட்டத்தில் அட்டகாசம் !!

0

அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள குரங்குகள் ஆக்ரோவா தோட்ட குடியிருப்பு பகுதிக்கு வருவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வரும் குரங்குகள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள உணவு பண்டங்களை உண்பதுடன், விவசாய பயிர்கள் அனைத்தையும் நாசப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் குடியிருப்பு பகுதியில் கூரைகள் மீது குரங்குகள் தாவி அங்கும் இங்கும் ஓடி திரிவதால், கூரைத்தகடுகள் சேதமாவதாகவும் வீடுகளில் தனியாக சிறு பிள்ளைகளை விட்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

மின்சார கம்பங்களில் குரங்குகள் தொங்கி விளையாடுவதால் மின் இணைப்பும் இடைக்கிடையே துண்டிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள மக்கள், பொதுமக்களின் நலன் கருதி, குரங்குகளைக் கட்டுப்படுத்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.