;
Athirady Tamil News

வேலூரில் கள ஆய்வை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

0

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள நேற்று வேலூர் சென்றார். சத்துவாச்சாரியில் காலை உணவு திட்டத்தையும் கள ஆய்வு திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கள ஆய்வு திட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூரில் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், வேலூரில் சத்துவாச்சாரி பாரதி நகரில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க செய்யப்பட்ட சிற்றுண்டியைச் சாப்பிட்டு தரத்தை ஆய்வு செய்தார். காலை உணவு திட்டம், சுகாதார நிலைய கட்டுமான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.