;
Athirady Tamil News

முகநூல் விருந்தில் யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல்!!

0

சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து 09 யுவதிகள் உட்பட 34 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றை பாணந்துறை வடக்கு பொலிஸார் இன்று (04) அதிகாலை சோதனையிட்டுள்ளனர்.

பொலிஸ் குழு நடத்திய சோதனையில் கஞ்சா, குஷ் மற்றும் மதுபானம் போன்ற பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விருந்தின் போது யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குழுவொன்றை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களின் பெற்றோரை அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.