;
Athirady Tamil News

தேசிய சுதந்திரதின உத்தியோகபூர்வ அரச விழாவுக்காக செலவிடப்பட்ட தொகையை வெளியிட்ட ஜனாதிபதி செயலகம்!

0

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தின் உத்தியோகபூர்வ அரச விழாவுக்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை 11,130,011 ரூபா 29 சதம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் அரச கொண்டாட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகையை விட இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கு மிகக் குறைவான தொகையே அரசாங்கம் செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சுதந்திர வைபவத்துக்காக அரசாங்கம் 5.8 மில்லியன் ரூபாவை செலவிட்டதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், கல்வி அமைச்சு சுதந்திர வைபவத்துக்கான ஆரம்ப செலவை மதிப்பிட்டுள்ளதாகவும், ஆனால் அந்த பணம் எதுவும் செலவிடப்படவில்லை எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.