;
Athirady Tamil News

சென்னையில் சைக்கிள் செல்ல தனிப்பாதை ஏற்படுத்த திட்டம் !!

0

சென்னை பெருநகருக்கான 3-வது மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சாலைகளில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சென்னையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனிப்பாதை அமைப்பது, அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது, மெட்ரோ ரெயில் நிலையங்களில் சைக்கிள் வசதி ஏற்படுத்துவது, சைக்கிள் ஷேரிங் திட்டத்தை மேம்படுத்துவது, சைக்கிள் நிறுத்த வசதிகளை அறிமுகம் செய்வது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டன. இந்த வசதிகளை நெதர்லாந்து நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.