;
Athirady Tamil News

பாராளுமன்றத்தில் வங்கிக் கிளைக்குப் பூட்டு!!

0

வங்கிகளின் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அதே வேளையில் பாராளுமன்றத்திலுள்ள இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டுள்ளது. இதனால் அங்கிருக்கும் பணியாளர்களும் பாராளுமன்றத்திற்குச் செல்லும் எம்பிக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வங்கிக் கிளை மூடப்படும் எனத் துண்டுப் பிரசுரமும் காட்சிப்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை வங்கிக் கிளை மூடப்பட்டிருந்த போதிலும், நீர், மின்சாரம் உள்ளிட்ட பாராளுமன்றத்தின் ஏனைய சேவை அலுவலகங்கள் வழமை போன்று திறந்திருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.