;
Athirady Tamil News

இந்தியாவில் கடந்த ஜனவரியில் 29 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!!

0

சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. மாதம் தோறும் பயனாளர் பாதுகாப்பு அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் கூடுதலான பயனர்களைக் கொண்ட சமூக வலைதளங்கள், ஒவ்வொரு மாதமும் தங்களது பயனாளர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி அறிக்கையாக வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் 29 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரையில் 29 லட்சத்து 18 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றில், பயனாளர்களிடம் இருந்து எந்தவித புகார்களும் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை அடிப்படையில் 10 லட்சத்து 38 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் அதனை பெற்றுக்கொண்டு எடுக்கப்பட்ட பதில் நடவடிக்கை, சமூக தளம் தவறாக பயன்படுத்தப்படாமல் எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை அந்த அறிக்கை கொண்டிருக்கும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.