;
Athirady Tamil News

சுவாச தொற்று, மூச்சு திணறல் காரணமாக 7 குழந்தைகள் பலி !!

0

மேற்கு வங்க மாநிலத்தில் அடினோ வைரஸ் பரவல் காரணமாக மக்கள் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக 12 பேர் பலியாகி உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்தனர். இந்த நிலையில் சுவாச கோளாறு மற்றும் மூச்சு திணறல் காரணமாக 7 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.

இதனை மாநில சுகாதார துறையினர் உறுதி செய்தனர். இதன்காரணமாக மாநிலம் முழுவதும் 151 ஆஸ்பத்திரிகளில் 600 குழந்தை மருத்துவர்கள் மற்றும் 5 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக மாநில சுகாதார துறையினர் தெரிவித்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.