;
Athirady Tamil News

இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போது பிரபல ராப் பாடகர் திடீர் மரணம்!!

0

இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போதே, பிரபல ராப் பாடகர் கோஸ்டா டிச் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்க ராப் பாடகரும் இசைக்கலைஞருமான கோஸ்டா டிச் (27), ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர் பாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அடுத்த சில நொடிகளில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமானார். கோஸ்டா டிச்சின் மரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான ஜூலியஸ் செல்லோ மாலேமா உட்பட பல்வேறு கலைஞர்கள், கோஸ்டா டிச்சின் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

கோஸ்டா டீச் என்று அழைக்கப்படும் கோஸ்டா சோபனோக்லு, மொசாம்பிக்கின் எல்லைக்கு அருகிலுள்ள பாம்பேலாவைச் சேர்ந்த வளர்ந்து வரும் கலைஞர் ஆவார். அவரது தனிப்பாடலான பிக் ஃப்ளெக்ஸா, யூடியூபில் 45 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.