;
Athirady Tamil News

அண்ணாமலைக்கு காய்ச்சல் பாதிப்பு!!

0

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தென்காசி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதுபற்றி விசாரித்த போது அவர் திடீரென்று பெங்களூர் சென்றது தெரியவந்தது. பெங்களூரில் தங்கியிருக்கும் அவருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு அங்கேயே ஓய்வெடுத்து வருகிறார்.

இடைவிடாத சுற்றுப்பயணம் காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு நாள் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதாகவும் தெரிவித்தனர். கர்நாடகாவில் இன்று பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை திரும்புவார் என்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.