;
Athirady Tamil News

ஆந்திர முன்னாள் முதல் மந்திரி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்!!

0

சமீப காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல் மந்திரி கிரண் குமார் ரெட்டி இன்று அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக கிரண் குமார் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

தனி தெலங்கானா மாநில பிரிவினைக்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் நல்லாரி கிரண்குமார் ரெட்டி. தெலங்கானா மாநில பிரிவினைக்குப் பிறகு சமக்கிய ஆந்திரா ( ஒருங்கிணைந்த ஆந்திரா என்ற) கட்சி தொடங்கி ஆந்திர மாநிலம் முழுவதும் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தார். அதன்பின், மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.