;
Athirady Tamil News

பாக்.கில் 2 தலிபான்கள் சுட்டுக்கொலை!!

0

பாகிஸ்தானில் `தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பினர் கராச்சி காவல் நிலையத்தில் கடந்த மாதம் நடத்திய துப்பாக்கி சூட்டில், 2 போலீசார் உள்பட 4 பேர் இறந்தனர். இந்நிலையில், பாக். தலிபான்கள் கராச்சி வரக் கூடும் என்று நேற்று முன்தினம் கிடைத்த தகவலின்படி, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரை தீவிரவாத ஒழிப்பு போலீசார் நிறுத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் அர்யதுல்லா என்ற ஹசன் மற்றும் வாகிதுல்லா என்ற காலித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.