;
Athirady Tamil News

திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது!!

0

திருமலையில் உள்ள புண்ணியத் தீர்த்தங்களில் ஒன்று தும்புரு தீர்த்தம். இந்தத் தீர்த்தம் ஏழுமலையான் கோவிலில் இருந்து 7½ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு பால்குன மாதம் பவுர்ணமி நாளில் உத்தர பால்குனி நட்சத்திரத்தன்று தும்புரு தீர்த்த முக்கொடி உற்சவம் நடப்பது வழக்கம்.

அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி திருமலை அருகே தும்புரு தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடக்கிறது. அன்று இந்தத் தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.