;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி- 28 பேர் படுகாயம்!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள பர்சூ பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் பீகாரைச் சேர்ந்த 4 பயணிகள் உயிரிழந்தனர். 28 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.