யாழ். திருநெல்வேலி பகுதியில் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்குதல்!!
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் விடுதி கணக்காளரை தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.