;
Athirady Tamil News

கல்குவாரி வெடி விபத்தில் 2 பேர் பலி!!

0

ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், வினுகொண்டா மண்டலம், திம்மய்ய பாலம் பகுதியில் வெங்கட்ராவ் என்பவருக்கு சொந்தமான கிரானைட் கல் குவாரி உள்ளது. இந்த கல்குவாரியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கல்குவாரியை வெடி வைத்து தகர்ப்பதற்காக தொழிலாளர்கள் பாறையில் துளையிட்டு வெடி மருந்துகளை நிரப்பிக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பாறையில் ஏற்பட்டிருந்த வெடி மருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பலராம் (வயது 31) என்ற தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படுகாயம் அடைந்த டாங்கோ (19), சாமு, மாங்குடு ஆகிய 3 பேரை தொழிலாளர்கள் மீட்டு வெனுகொண்டாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி டாங்கோ பரிதாபமாக இறந்தார். 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வெனுகொண்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.