;
Athirady Tamil News

அணுவாயுதங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வு – ரஷ்ய, சீனாவின் பங்களிப்பு அதிகம்!

0

அண்மைய ஆண்டுகளில் நாடுகளுக்கிடையிலான பூசல்கள் அதிகரித்துள்ளநிலையில், அணுவாயுதப் பயன்பாடு தொடர்பிலான சிந்தனைகளும் உலக மக்கள் மத்தியில் பாரிய பதற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

உக்ரைன் மற்றும் ரஷ்ய யுத்தமும் மேலும் அணுவாயுதப் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், உலக நாடுகளிடம் உள்ள மொத்த அணுவாயுதங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு பெருமளவில் உயர்ந்துள்ளது.

இந்த உயர்வுக்கு ரஷ்யா மற்றும் சீனாவின் பங்களிப்பு பெருமளவில் உள்ளதாக அணு ஆயுத தடை மற்றும் கண்காணிப்பு மையம் (Nuclear Weapons Ban Monitor) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் 9,575 அணுவாயுதக் கட்டமைப்புகள் இருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதன் மொத்த சக்தியானது இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் வீசப்பட்ட அணு குண்டின் ஆற்றலை விட 135,000 மடங்கு அதிகமாகும்.

இவை யாவும் எந்த நிலையிலும் தாக்குவதற்கு தயார் நிலையில் உள்ளவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணுவாயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் உலகளவில் அதிர்ச்சியையும், பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.