;
Athirady Tamil News

மகாத்மா காந்தியின் பேரன் காலமானார்!!

0

தேசதந்தை மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளருமான அருண் மணிலால் காந்தி மராட்டியத்தில் உள்ள கோலாப்பூரில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89. அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காந்தியின் மகனான மணிலால் காந்திக்கு பிறந்தவர் அருண் மணிலால் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 14, 1934-ல் மணிலால் காந்தி மற்றும் சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்குப் பிறந்த அருண் காந்தி, ஒரு ஆர்வலராக தனது தாத்தாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றினார். எனினும் `தனது தாத்தாவின் துறவு வாழ்க்கை முறையைத் தவிர்த்துவிட்டார். அவர் 2017 இல், அவர் The Gift of Anger: And Other Lessons From My Grandfather Mahatma Gandhi ஆகிய புத்தகங்களை வெளியிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.