;
Athirady Tamil News

இன்றும் கடும் மழை !!

0

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளிலும் முற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலநறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் ஆங்காங்கே 100 மில்லி லீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.