;
Athirady Tamil News

ஓரே நேரத்தில் சந்திக்க இணக்கம் !!

0

வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் எம்.பிக்களையும் ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த சந்திப்பின்போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் சந்திப்புகள் நடக்கவுள்ளன.

கிழக்கு மாகாண எம்.பிக்களை அழைக்காமல் வடக்கு எம்.பிக்களை மாத்திரம் ஜனாதிபதி சந்திக்க முன்னர் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் இன்றைய சந்திப்பில் இதுவிடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதனையடுத்தே அந்த முடிவை ஜனாதிபதி மாற்றியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.