;
Athirady Tamil News

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு: வைப்புக்கள், வங்கி முறைமை பாதுகாக்கப்படும்- மத்திய வங்கி ஆளுநர் உறுதி!!

0

சர்வதேச கடன் வழங்குனர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று உறுதியளித்துள்ளார்.

“பொருளாதாரத்தின் நிலை: சவால்கள் மற்றும் முன்னோக்கு மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை – 2022” என்ற தலைப்பில் உரையாற்றிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வங்கி முறைமை வீழ்ச்சி மற்றும் கடன் மறுசீரமைப்பு, பொதுமக்களின் வைப்புகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றிய அச்சத்தைப் போக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.

பல்வேறு மூலைகளிலிருந்து ஊகங்கள் இருந்தாலும், மத்திய வங்கி நிதி அமைப்பு உறுதித்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு எப்போதும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எதிர்காலத்திலும் அவ்வாறே செய்யும் என்றும் ஆளுநர் கூறினார்.

ஒருவித உள்நாட்டுக் கடன் மேம்படுத்தல் இருந்தாலும், பொதுமக்களின் வைப்புத்தொகையைப் பாதுகாப்பது மற்றும் வங்கி அமைப்பைப் பாதுகாப்பது முன்னுரிமை பெறும் என்று ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.

வட்டி விகிதங்கள், குறிப்பாக சந்தை வட்டி விகிதங்கள் ஆண்டின் இரண்டாம் பாதியில் வேகமாக குறையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறினார்.

இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில் பணவீக்கம் ஒற்றை இலக்க புள்ளிகளுக்குக் குறையும் என்றும், குறிப்பாக முழுமையான கடன் மறுசீரமைப்பு செயல்முறை அறிவிக்கப்பட்டவுடன் வட்டி விகிதங்களும் வேகமாகக் குறையும் என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.