;
Athirady Tamil News

“அரகலய”வின் மூன்றாவது தரப்பினர் யார்? !! (வீடியோ)

0

“அரகலய” போராட்டத்தினால் நியமிக்கப்பட்ட அரசாங்கமே தற்போது உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

“அரகலய” போராட்டத்தினால் தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார் என்றும் அதன் காரணமாகவே இந்த அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளது என நாமல் கூறினார்.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியும் கூட மூன்றாவது தரப்பினரே போராட்டத்தை வழிநடத்தியதாக தற்போது கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அரகலயவுக்கு ஆதரவளித்த மூன்றாவது தரப்பினர் யார் என்பது குறித்தும் விரைவில் மேலதிக விவரங்கள் வெளிவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.