;
Athirady Tamil News

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது !!!

0

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 2,109 ஆக இருந்தது. இன்று புதிதாக 1,690 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 76 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 3,469 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 25 ஆயிரத்து 250 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 19,613 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 1,793 குறைவாகும். தொற்று பாதிப்பால் நேற்று ராஜஸ்தானில் 4 பேர் உள்பட 12 பேர் மற்றும் கேரளாவில் விடுபட்ட 2 மரணங்கள் என மேலும் 14 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 736 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.