;
Athirady Tamil News

போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றம் – 2 மாத சிறைத்தண்டனை விதித்த யாழ்.நீதிமன்று!!

0

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கைதான இளைஞனுக்கு யாழ். நீதவான் நீதிமன்று 2 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை , தலைக்கவசம் அணியாமை , சாரதி அனுமதி பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை , உள்ளிட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்து இருந்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை நேற்றைய தினம் வியாழக்கிழமை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , இளைஞன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , இளைஞனுக்கு இரண்டு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது யாழ்.நீதவான் நீதிமன்று.

You might also like

Leave A Reply

Your email address will not be published.