;
Athirady Tamil News

சந்தேகநபரை கவனிக்காத இருவர் இடைநீக்கம் !!

0

ஹெரோய்ன் மில்லிகிராம் 6,500 உடமையில் வைத்திருந்தமை மற்றம் பல பிடிவிறாந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்த நபர், தலங்கம பொலிஸாரினால் தலவத்துக்கொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

அவ்வாறு கைது செய்யப்பட்டு பொலிஸ் ஜீப்பில் ஏற்றப்பட்டிருந்த சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நுகேகொடவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியினால் இவ்விருவரும் நேற்று (16) பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை (15) கைது செய்யப்பட்ட இவர், களுபோவில வைத்தியசாலை நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அன்றிரவு பொலிஸ் ஜீப்பில் ஏற்றப்பட்டார், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுக்கொண்டிருந்த போதே, மாதிவல கிம்புலாவல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் ஜீப்பிலிருந்து தப்பியோடிவிட்டார்.

அவ்வாறு தப்பியோடியவர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.