;
Athirady Tamil News

இத்தாலியில் பலத்த மழை: பாலம் இடிந்து விழுந்து 9 பேர் பலி!!

0

இத்தாலியின் வடக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகிறது. பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. 37 நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் பாதித்துள்ளதாகவும், சுமார் 120 நிலச்சரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.