;
Athirady Tamil News

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலை !!

0

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலை தெளிவாக உள்ளது. அமைதியின் பக்கம் இந்தியா உள்ளது.

அதில் உறுதியாக இருப்போம் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்தப் பேட்டியில் மோடி மேலும் கூறியதாவது, “உணவு, எரிபொருள் மற்றும் உரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளில் சவால்களை சந்தித்து வரும் நாடுகளுக்கு உதவ நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.