;
Athirady Tamil News

லாரி டிரைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அறிய லாரியில் ஏறி இரவில் பயணம் செய்த ராகுல் காந்தி!!

0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு லாரி ஒன்றில் ஏறி பயணம் செய்தார். அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து லாரியில் ஏறிய அவர் டெல்லியில் இருந்து சண்டிகருக்கு சென்றார். அம்பாலா அருகே ராகுல் காந்தி லாரியில் இருப்பது போன்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் தொண்டர்கள் டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதனுடன் கனரக லாரி டிரைவர்கள் இரவு முழுவதும் லாரி ஓட்டும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி இரவு நேரத்தில் லாரியில் ஏறி பயணம் செய்ததாக காங்கிரஸ் தொண்டர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இதேபோல் காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்காரியும், ராகுல் காந்தி லாரிக்குள் அமர்ந்து தொண்டர்களை நோக்கி கையசைக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஷ்ரினேட் கூறுகையில்,’ இந்த நாட்டின் குரலை கேட்கவும், நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் ராகுல் காந்தி விரும்புகிறார்’ என்றார். இதற்கிடையே தற்போது ராகுல் காந்தி குருத்வாராவில் உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.