;
Athirady Tamil News

மலையக மக்களின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நிகழ்வு!! (PHOTOS)

0

மலையக மக்களின் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று(27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.

கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம் இந் நிகழ்வை தலைமையேற்று நடாத்தியதுடன் பல்வேறு தொழிற் சங்கங்கள் , அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் மலையக மக்களின் பிரச்சினைகளை மையமாகக்கொண்டு உரையாற்றியிருந்தனர்.

இந் நிகழ்வில் மலையக மக்கள் , தொழிற்சங்க அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.