;
Athirady Tamil News

அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கலந்துரையாடல்!!

0

வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை குறித்த சந்திப்பு நடைபெற்றது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவையில் குறித்த விடயங்களை பேசுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் ஏனைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.