ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்!! (படங்கள், வீடியோ)
மட்டக்களப்பு – மன்முணை மேற்கு பிரதேசத்துக்கு உட்பட்ட சொறுவாமுனை அருள்மிகு ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இன்று இடம்பெற்றது.
இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இன்று மாலை 5.30 மணிவரை இடம்பெறவுள்ளது.
அத்தோடு அம்பாளின் தேவஸ்தான அஷ்டபந்தன புனராவர்த்தன பஞ்சகுண்டபஷ மஹா கும்பாவிஷேகம் நாளையதினம் (17) இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று நிறைவில் பாற்குடப்பனியும், 1008 நவோஸ்திர சங்காபிஷேகமும் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தில் பிரதிஸ்டா பிரதம குரு கிரியா கலாஜோதி சிவாகமசாகரம், ஜோதிடகலாபூஷணம் ஈசானசிவம் சிவசிஸ்ரீ இரா.கு.அருளானந்த சாவாச்சாரியார் தலைமையிலான குருமார்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”