;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1773544.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

காஷ்மீரில் இருந்து ஒரே நாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

0

பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதகே காரணமாக காஷ்மீரில் இருந்து 10,090 சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகள் வெளியேற்றம்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோடை காலத்தில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த மக்கள் தங்கள் திட்டங்களை ரத்து செய்து சொந்த ஊர்களுக்கு கூட்டம் கூட்டமாக திரும்பி வருகின்றனர்.

அந்தவகையில், தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து நேற்று ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். அதாவது ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 10,090 பேர் வெளியேறியுள்ளனர்.

மாநிலத்திற்குள் புதிதாக 4,107 பேர் வந்திருந்தனர். மேலும், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக இந்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதில் விமான கட்டணங்களை உயர்த்த கூடாது என்று அரசு தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.