;
Athirady Tamil News

ஜோர்ஜியாவில் UCMAS சர்வதேச போட்டியில் யாழ் மாணவர்கள் சாதனை!

0

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்கள்.

திருநெல்வேலி, நல்லூர், சுண்டிக்குளி UCMAS பயிற்சி நிலைய மாணவர்கள் 8 பேர் பங்கேற்று வெற்றி கிண்ணங்களைப் பெற்று இலங்கைக்கும் யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.

அவர்களில் விநாயகிருஷ்ணன் கோபிகிருஷ்னா சம்பியன் வெற்றி கிண்ணத்தத்தையும் மற்றும் அஷ்வினி அனோஜன், அபூர்விகா ரகுநாதன் 1 st runner up வெற்றி கிண்ணங்களையும், வினோஷ்கா பிரசன்னா, சுமணன் அப்ஷரன், கிருஷ்ணிகா நிதர்சன், மோகனகுமார் வேணுகானன் 2 nd runner up கிண்ணங்களையும் கேனுஜா மோகனகுமாரன் 3 rd runner up கிண்ணணத்தையும் பெற்றுள்ளார்கள்.

மேலும் அங்கு நடைபெற்ற UCMAS world cup போட்டிக்குரிய அணியில் திருநெல்வேலி ucmas மாணவி அஷ்வினி அனோஜன் பங்கு பற்றி Silver Medal ஐ இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.