;
Athirady Tamil News

இலங்கை வாழ் பெற்றோரை அதிர வைத்த மோசமான செயல்! பாரிய வலையமைப்புடன் சிக்கிய கும்பல்

0

கண்டியில் 36 சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அதனை வீடியோவாக பதிவு செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவரும், பொறியியலாளர் ஒருவரும் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராதனை வீதியில் வசிக்கும் நபர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபரான வர்த்தகர் முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் 3 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தடுப்புக் காவல் விசாரணைகளின் மூலம் இந்த பாரிய குற்றச் கும்பல் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளது.

பாரிய குற்றச் கும்பல்

அதற்கமைய, இதுவரை கண்டெடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில் 36 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆனால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுவர்களை தகாத செயற்பாடுகளுக்கு உட்படுத்துவதற்காக மூன்று வெவ்வேறு இடங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

இவர்கள் நீண்ட காலமாக திட்டமிட்டு இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கும்பலில் மேலும் 5 பேருக்குத் தொடர்பு இருப்பதாகப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சமூகத்தில் உயர்மட்டப் பதவி

ஏனைய சந்தேகநபர்களை கைது செய்ய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தர்ஷிகா குமாரி தெரிவித்துள்ளார்.

தலைமறைவாக உள்ள ஏனைய சந்தேகநபர்களில் மூவர் சமூகத்தில் உயர்மட்டப் பதவிகளை வகிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள பொறியியலாளரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.